ஆ தி மு க தலைமை கழகம்
நேற்று வெளியிட்டுள் அறிக்கையில் , பேரறிஞர் அண்ணாவின் 41வது ஆண்டு நினைவு தினமான வரும் புதன் கிழமை காலை பத்து மணி அளவில் சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்க பட்டு உள்ளது. கழகத்தின் அவை தலைவர் திரு மதுசூதனன் தலைமையில் , ஆ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் , கட்சியின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் வலயம் வெய்து அஞ்சலி செய்ய இருப்பதாக குறிப்பட்டுள்ளது , எந்த நிகழ்சியில் அணைத்து நிரவகிகளும் தொண்டர்களும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அறிவிப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது
திங்கள், 1 பிப்ரவரி, 2010
அதிமுக நிர்வாகிகள்
உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள நிரந்திர பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.முதல் முறையாக தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் மாவட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இது குறித்து அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படி கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, கிளை, வார்டு, வட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா, அவைத் தலைவராக மதுசூதனன் நியமி்க்கப்பட்டுள்ளனர். வட சென்னை மாவட்ட பொறுப்பாளராகவும் மதுசூதனன் இருப்பார்.அதிமுக ஆலோசகராக இருந்த சி.பொன்னையன், கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் அவர் செயல்படுவார்.கட்சியின் பொருளாளராக பன்னீர்செல்வம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளராக அவர் செயல்படுவார்.தலைமை நிலையச் செயலாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், ஈரோடு புறநகர் மற்றும் நீலகிரி மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்படுவார்.கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக விசாலாட்சி நெடுஞ்செழியன், சு.முத்துசாமி (பொறுப்பாளர்-ஈரோடு, நாமக்கல்), ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத், என்.தளவாய் சுந்தரம் (பொறுப்பாளர் -கன்னியாகுமரி), செம்மலை (பொறுப்பாளர்-சேலம் மாநகர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு), பா.வளர்மதி (பொறுப்பாளர்-விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம்), கருப்பசாமி (திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொறுப்பாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக டி.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவர் திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் பதவிகளையும் வகிப்பார்.கொள்கை பரப்புச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மு.தம்பிதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் இருப்பார்.பி.எச்.பாண்டியன்-அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர், பொள்ளாச்சி ஜெயராமன்-தேர்தல் பிரிவு செயலாளர் (பொறுப்பாளர் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர்), பாலகங்கா- தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் (பொறுப்பாளர் - திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு) ஆகியோரும்துரை. கோவிந்தரராஜன்- விவசாய பிரிவு தலைவர், சோழன் பழனிச்சாமி- விவசாய துறை செயலாளர் (பொறுப்பாளர்- சிவகங்கை), நயினார் நாகேந்திரன்- ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் (பொறுப்பாளர்- திருநெல்வேலி மாநகர்)ஆர்.சின்னசாமி- அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், ஆதிராஜாராம்- எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் (பொறுப்பாளர்- திருவள்ளூர், வேலூர் கிழக்கு மற்றும் மேற்கு), ஆர்.பி.உதயக்குமார்- மாணவரணி செயலாளர் (பொறுப்பாளர் - மதுரை மாநகர், விருதுநகர்), கோகுல இந்திரா- மகளிர் அணி செயலாளராகவும்,டாக்டர் மைத்ரேயன்- மருத்துவ அணி தலைவர் (பொறுப்பாளர்- தென்சென்னை, காஞ்சிபுரம் கிழக்கு மற்றும் மேற்கு), டாக்டர். பி.வேணுகோபால்- மருத்துவ அணி தலைவர், ஜஸ்டின் செல்வராஜ் -சிறுபான்மை நலப்பிரிவு தலைவர், அன்வர் ராஜா- சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர், சேதுராமன்- வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், பி.எச்.மனோஜ் பாண்டியன்- வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும்.பழ.கருப்பையா-இலக்கிய அணித் தலைவர், வைகை செல்வன்- இலக்கிய அணிச் செயலாளர், கே.கே. கலைமணி- மீனவர் பிரிவுச் செயலாளர், ஜெனிபர் சந்திரன்- மீனவர் பிரிவு இணைச் செயலாளர் (பொறுப்பாளர்- தூத்துக்குடி), ஆர்.கமலக்கண்ணன்- அமைப்புச் சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர், டாக்டர் எஸ்.வெங்கடேசன்- இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் (பொறுப்பாளர்- தஞ்சாவூர் வடக்கு, தெற்கு நாகப்பட்டினம், திருவாரூர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள்:அதே போல மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களது விவரம்:வடசென்னை- பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.தென்சென்னை- செந்தமிழன் எம்.எல்.ஏ.திருவள்ளூர்- மாதவரம் வி.மூர்த்திகாஞ்சீபுரம் கிழக்கு- சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.காஞ்சீபுரம் மேற்கு- திருத்தணி கோ.அரி எம்.எல்.ஏ.வேலூர் கிழக்கு- எல்.கே.எம்.பி. வாசு.வேலூர் மேற்கு - கே.சி. வீரமணி.திருவண்ணாமலை வடக்கு- முக்கூர் என். சுப்பிரமணியன்.திருவண்ணாமலை தெற்கு - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.கடலூர் கிழக்கு- எம்.சி. சம்பத்கடலூர் மேற்கு-ஆ. அருண்மொழிதேவன்.விழுப்புரம் வடக்கு-சி.வி.சண்முகம்.விழுப்புரம் தெற்கு- இரா.குமரகுரு எம்.எல்.ஏ.கிருஷ்ணகிரி-சி.வி. ராஜேந்திரன்தர்மபுரி-ஆர்.அன்பழகன்சேலம் மாநகர்-எம்.கே. செல்வராஜ்சேலம் புறநகர் (கிழக்கு)- எஸ்.கே.செல்வம்சேலம் புறநகர் (மேற்கு)- எஸ்.ஆர்.சரவணன்நாமக்கல்- பி.தங்கமணி.ஈரோடு மாநகர்- கே.வி. ராமலிங்கம்ஈரோடு புறநகர் மாவட்டம் - என்.டி.வெங்கடாசலம்.திருப்பூர்-திருப்பூர் சிவசாமிகோவை மாநகர்-செ.ம.வேலுசாமிகோவை புறநகர்- எஸ்.பி. வேலுமணிநீலகிரி-எம்.செல்வராஜ்திருச்சி மாநகர்- ஆர்.மனோகரன்திருச்சி புறநகர்- சுப்பு என்ற பே.சுப்பிரமணியன்பெரம்பலூர்- ப.இளவழகன்கரூர்- வி.செந்தில் பாலாஜிதஞ்சை (வடக்கு)- எம். ரெங்கசாமிதஞ்சை (தெற்கு)- ஆர். வைத்திலிங்கம்நாகை- ஓ.எஸ்.மணியன்திருவாரூர்- இரா. காமராஜ்புதுக்கோட்டை- டி. கருப்பையாமதுரை மாநகர்- செல்லூர் கே. ராஜுமதுரை புறநகர்- எம். ஜெயராமன்தேனி- தங்கத் தமிழ்ச்செல்வன்.திண்டுக்கல்- இரா. விசுவநாதன்விருதுநகர்- கே.கே.சிவசாமிசிவகங்கை- கே. கே.உமாதேவன்ராமநாதபுரம்- கே.சி. ஆணிமுத்துநெல்லை மாநகர்- பாப்புலர் வி. முத்தையாநெல்லை புறநகர்- பி. செந்தூர்பாண்டியன்தூத்துக்குடி- பள்ளத்தூர் டி. முருகேசன்.கன்னியாகுமரி- கே.டி. பச்சைமால்
திமுகவைவிட அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகம்-சோ

சென்னை: தனிக் கட்சியாக பார்க்கும்போது திமுகவை விட அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சோ பேசுகையி்ல்,தமிழகத்தில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டு விட்டனர்.மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் தமிழகத்தின் நிதி நிலை சீராக இருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு கஜானா திவாலாகிவிடும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.திமுகவுக்கு மாற்றுக் கட்சி அதிமுக தான். அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது: தமிழகத்தில் ஒரு தேர்தலாவது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் நடத்தினால் போதும் திமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு அதிகமா என்பது தெரிந்துவிடும்.திமுகவுக்கு கூட்டணி தான் தொடர்ந்து பலமாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியை எதிர்த்து ஓட்டு வாங்கும் சக்தி மட்டும் தான் அதிமுகவுக்கு இல்லை. ஆனால், தனிக் கட்சியாக பார்க்கும்போது அதிமுகவுக்கு உள்ள மக்கள் ஆதரவு திமுகவை விட அதிகம்.காமராஜர் ஆட்சியை அமைக்கக் கூடிய காங்கிரஸார் இந்தியாவில் இல்லை. காமராஜரைப் போன்ற நேர்மையானவர்களும் இல்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவு இன்றி, தனியாக தேர்தலில் காங்கிரஸ் நிற்காது. அந்த 'அபாயகரமான' செயலை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.தேசிய அளவில் இப்போது இருக்கக் கூடிய ஒரே எதிர்க்கட்சி பாஜக தான். ஆனால், இப்போது அந்தக் கட்சி எதைச் சொன்னாலும் எடுபடாத நிலை உள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்து வருவது உண்மைதான். கட்சிக்குள் ஜனநாயகம் மிகவும் அதிகரித்து விட்டது. பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவன் என்ற நிலை உருவாகிவிட்டது.மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை தலைவர் பொறுப்பில் அமர்த்த வேண்டும். பாஜகவின் செல்வாக்கு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல.கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு இடைத்தேர்தல் வந்தால் என்ன பயன் கிடைக்குமோ, அதுதான் செம்மொழி மாநாட்டால் கிடைக்கப்போகிறது. ஆனால், மக்களுக்கு பணம் மட்டும் கிடைக்காது.நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது வேண்டாத விஷயம். இது நடைமுறைக்கு வந்தால், விருப்பம் இல்லாவிட்டாலும் வலுக்கட்டாயமாக பெண்கள் தேர்தலில் நிறுத்தப்படும் நிலை உருவாகும் என்றார் சோ.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)